செவ்வாய், 17 செப்டம்பர், 2019

கருணை வடிவானவளே!

கருணை வடிவானவளே! கைவளை கலகலக்க அசைந்தாடும் சின்னவளே! பச்சைப் பட்டாடையில் அழகானவளே!
சின்ன இடையில் நடைநடக்கும் அன்னமே!கிளையில் அமரும் கிளியை அணிந்தவளே!
மஞ்சளை பூசிக்கொண்டு மங்கலம் தருவாயே! குங்குமம் அணிந்து கொண்டு மாங்கல்யம் காப்பாயே!
உன் ஒத்தைக் கல்லு
மூக்குத்தியில் ஒளிதருவாய் இந்தபூமிக்கு!
அம்மா அம்மா என குரல்விடுக்கும் பக்தனுக்கு செவிமடுப்பாயா!
மந்திரம்  என்ன சொல்லம்மா உந்தன் அடிபணிந்தேன்!
எந்த தந்திரமும் பலிக்கவில்லை நீ இருக்கும் போது  எந்த கவலை இல்லை! எமபயமுமில்லை !

@ சிவ அறிவழகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக