தாய் மடியே தலையணையிலும்
மேல் என்பான்
அவளுக்கு ஒன்று என்றால்
ஆடிப்போவான்
அவனி எங்கும் தேடினாலும்
அவள் போல் இல்லை என்பான்
கன்னியரின் கடைக்கண் கண்டபோது
முந்தி காட்டி பந்தி வைத்த போது
அத்தனையும் மாறிபோகுமோ
சிறு புன்னகையில் உதிரும் பூக்களைத்தான்
நான் சிறகாய் எண்ணியுள்ளேன்!
என் கண்மணியே உன் விழி உவர் மழை தான்
நம் காதலை காட்டுதடி !
பேரிகை முழக்கமெல்லாம் சத்தம் என்பதுதான்
உந்தன் உதட்டில் பிறந்தடி !
கவலையும் கஷ்டமெல்லாம் பெரும் காயம் என்பதில்லை
கானல் நீராகுமடி !
தாலாட்டு பாடச் சொல்லலாமா தென்றலை
குளிர் சுனை நீர்க்குளத்தில் கல் வீசி
அதிர்வலைகளை கைதொட்டு உரசிபார்ப்போமா
செஞ்சாற்று குழம்பெடுத்து மங்கையர்
கால் படச்செய்யலாமா
வேம்பின் கரத்திருந்து தவழ்ந்து வரும்
இலையின் மிதவோட்டம் கண்டு செல்லலாமா
தென்னங்கீற்றின் ஓலையாட்டத்தை
பண்ணமைத்து இசை போடலாமா
ஆற்றின் நீரோட்டத்தில் துள்ளிடும்
மீனினத்தை கண்கொண்டு பேசலாமா
கதிர் முற்றி அறுவடைக்கு காத்திருக்கும்
பயிர் மேனி தொட்டு உணரலாமா
இரை கண்டு உறைவிடம் செல்லும்
மைனாவை வழிமறித்து பேசலாமா
தங்கையின் பிஞ்சு கரம் பிடித்து
பள்ளித்தலம் நோக்கி நடக்கும்
சிருவனைக்கைசாடை செய்யலாமா
கொவ்வை இலை பறித்து கற்பலகை ஒடுபூசி
தமிழ் எழுத்தைப் பதிக்கலாமா
தமிழ்த்தாய் வாழ்த்தினையே உணர்வுகொண்டு
உரத்திச் சொல்லி பாடலாமா
அவாவுடன்
உன் உச்சி முகர்தலில் !
பட்டுடல் ஸ்பரிசிக்கையில் !
பொக்கை வாய்ப் புன்னகையில்!
தாத்தாவின் மறுபிறவி இவன்
எனும்போது!
பிறர் உன் வார்ப்படம் எனும் போது!
எல்லா கனங்களும் கரைந்து லேசாகி
பறப்பது போன்ற உணர்வு !
ஆண் மகவு பெற்ற மமதையில் அப்பாவுக்கு!