இந்திர சௌந்தரி
அன்பினில் நிரந்தரி
ஆசை காதலி
வதன மோகினி
மதுர சோதி நீ
நித்தில இசை நீ
சுவர்க்க பூமி நீ
சுவையினில் மாங்கனி
சுவைத்த பின் தேன் துளி
சுந்தர வதனி
பெண்டுலமாவதுன் காதணி
பஞ்சனை நெஞ்சினில்
தவழ்ந்திடும் கழுத்தணி
உலவும் தென்றலில்
ஊஞ்சலாடும் உன் குழலடி
பாவை உன் நெற்றியில்
சந்திர ஒளியடி
ஊறிய தேனில்
நீந்திடும் இதழடி
வைரத்தை கூர்ப்பாக்கும்
உந்தன் விழியடி
மாவினை எடுப்பதும்
கோலமிடுவதும் மங்கையர் தொழிலடி
உன் பூவிதழ் விரலால்
மாவினை தொடுவதே
கோலாகலம் தானடி
வேல்விழி தலைவி
வேலவர் புதல்வி
காதல் நாயகி
காண்பவர் வியந்திடும்
காந்தார எழிலினி
கஜமுகன் துணையும்
குரு திருவருளும்
என்றும் உனக்கடி
அறித்யா அறிவழகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக