ஞாயிறு, 14 நவம்பர், 2010

அவா

 
இளைப்பாருவோமா இரவின் மடியிலே 
தாலாட்டு பாடச் சொல்லலாமா தென்றலை
குளிர் சுனை நீர்க்குளத்தில் கல் வீசி
அதிர்வலைகளை கைதொட்டு உரசிபார்ப்போமா
செஞ்சாற்று குழம்பெடுத்து மங்கையர்
கால் படச்செய்யலாமா
வேம்பின் கரத்திருந்து தவழ்ந்து வரும்
இலையின் மிதவோட்டம் கண்டு செல்லலாமா
தென்னங்கீற்றின் ஓலையாட்டத்தை
பண்ணமைத்து இசை போடலாமா
ஆற்றின் நீரோட்டத்தில் துள்ளிடும்
மீனினத்தை கண்கொண்டு பேசலாமா
கதிர் முற்றி அறுவடைக்கு காத்திருக்கும்
பயிர் மேனி தொட்டு உணரலாமா
இரை கண்டு உறைவிடம் செல்லும்
மைனாவை வழிமறித்து பேசலாமா
தங்கையின் பிஞ்சு கரம் பிடித்து
பள்ளித்தலம் நோக்கி  நடக்கும்
சிருவனைக்கைசாடை செய்யலாமா
கொவ்வை இலை பறித்து கற்பலகை ஒடுபூசி
தமிழ் எழுத்தைப் பதிக்கலாமா
தமிழ்த்தாய் வாழ்த்தினையே உணர்வுகொண்டு
உரத்திச் சொல்லி பாடலாமா
அவாவுடன்

அறித்யா அறிவழகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக