Message body
என் வாழ்க்கை பாதையை நீ
செப்பனிட மாட்டாயா !
கல்லான பாதையை நான் கந்தா என்றே
நான் கடந்திடுவேன் !
முள்ளான பாதையை நான் முருகா
என்றே முந்தி செல்வேன் !
புதைகுழி வந்துவிட்டால் கடம்பா
நான் என்ன செய்வேன் !
கடம்பா நான் என்ன செய்வேன் !
முகத்திரண்டு விழியிருந்தும் ஐயா
உனைக் காண வழியில்லையே !
கண்ணொளியை நீ தாராய் !
விழி மலரை உணரவைப்பாய் முருகா!
என் வாழ்க்கை பாதையை நீ
செப்பனிட மாட்டாயா !
சண்முகா! சண்முகா ! சண்முகா !
சரணம் ! சரணம் ! சரணம்!
அறித்யா அறிவழகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக