செவ்வாய், 22 நவம்பர், 2011

முருகனைப் பாடாமல்

செந்தூர் முருகனைப் பாடாமல் மனமே
என் வசம் திரும்பாதே !

செவ்வேல் அழகைப் போற்றாமல்
என் வாழ்வில் வசந்தம் மலராதே !

கூப்பிட்ட குரலோசை கேட்டோடி வருவானே கந்தன்
சிரம் தாழ்த்தி கும்பிட்ட பேர்க்கெல்லாம்
பயம் போக்கி தெளிவிப்பான் என் அப்பன் !

பாதநடைப் பிரியன் அவன் தலம் நோக்கி
நடக்கயிலே நம்மோடு வருவானே ஐயன்!

செந்தாழம் பூவில் வாசம் சுகந்தம் என்றால்
அருணகிரி திருப்புகழ் வசந்த சுகந்தம் என்பேன் !

குன்னக்குடி நாயகன் குழந்தை வடிவேலவன்
சந்தம் சொல்லி பாடுவோம்

வெள்ளி முளைக்கும் வேளையிலே
வெண்கல மணியோசை கேட்கையிலே

வீணை நரம்புகள் போல் சிலிர்த்தெழுமே
மனம் கதிரேசன் மலர்ப்பதம் நாடிடுமே !

சக்தி உமை பாலகனே வெற்றி வடிவேலனே
சூரனை சமர் செய்த சம்கார மூர்த்தியே !

சக்தி கொடு எனக்கு இல்லையேல் முக்தி கொடு!

அறித்யா அறிவழகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக