சனி, 26 நவம்பர், 2011

கந்தனைப் பாட

சிந்துகின்ற தேனருவி
சந்தம் சொல்லி பாடி விடும் !
கந்தன் உன்னை பாட மட்டும்

காற்றலைகள் அனுமதிக்கும் !
காற்றலைகள் அனுமதிக்கும் !

பேசுகின்ற சங்கொலிகள்
சங்கநாதம் இசைத்துவிடும் !

முத்தமிழ் முதல்வன் உன்னை
எந்நேரம் முழங்க மட்டும்

கடலலை அனுமதிக்கும் !
கடலலை அனுமதிக்கும் !

ஆற்றங்கரை கயல்கள் எல்லாம்
அரோகரா பாடியன்றோ
துள்ளி ஆடி விடும் !
அண்ணலே உன்நினைவில் ஆடமட்டும்

நதி நீர் அனுமதிக்கும் !
நதி நீர் அனுமதிக்கும் !

வீசுகின்ற மென்தென்றல்
ஓம் ஓம் என்றபடி கவரி வீசும் !

நாணல் கீற்று அதற்கேற்ப அசைவுதரும்!
அசைவுகள் மாறிவிட்டால்

புயலாய் எதிரொலிக்கும் !
புயலாய் எதிரொலிக்கும் !

மார்கழி மாசத்திலே பூக்கின்ற
பூக்கள் எல்லாம் உந்தனுக்காய் மலர்ந்துவிடும்!

கோர்க்கப்பட்ட மாலை எல்லாம்

வேலர் உம்மை அலங்கரிக்கும் !
வேலர் உம்மை அலங்கரிக்கும் !

என்னுடல் ஆர்ப்பரிக்கும் !

ஞானத்தின் ஒளிவடிவே அழகா குமரா !
கொட்டும் ஒளிக் கதிரிலெல்லாம்

பிரணவ மந்திரமே வரிவடிவாய் விழுகுதய்யா !
ஆதலால் பொழுதும் புலர்ந்தய்யா !
பொழுதும் புலர்ந்தய்யா !

                                   அறித்யா அறிவழகன்

செவ்வாய், 22 நவம்பர், 2011

முருகனைப் பாடாமல்

செந்தூர் முருகனைப் பாடாமல் மனமே
என் வசம் திரும்பாதே !

செவ்வேல் அழகைப் போற்றாமல்
என் வாழ்வில் வசந்தம் மலராதே !

கூப்பிட்ட குரலோசை கேட்டோடி வருவானே கந்தன்
சிரம் தாழ்த்தி கும்பிட்ட பேர்க்கெல்லாம்
பயம் போக்கி தெளிவிப்பான் என் அப்பன் !

பாதநடைப் பிரியன் அவன் தலம் நோக்கி
நடக்கயிலே நம்மோடு வருவானே ஐயன்!

செந்தாழம் பூவில் வாசம் சுகந்தம் என்றால்
அருணகிரி திருப்புகழ் வசந்த சுகந்தம் என்பேன் !

குன்னக்குடி நாயகன் குழந்தை வடிவேலவன்
சந்தம் சொல்லி பாடுவோம்

வெள்ளி முளைக்கும் வேளையிலே
வெண்கல மணியோசை கேட்கையிலே

வீணை நரம்புகள் போல் சிலிர்த்தெழுமே
மனம் கதிரேசன் மலர்ப்பதம் நாடிடுமே !

சக்தி உமை பாலகனே வெற்றி வடிவேலனே
சூரனை சமர் செய்த சம்கார மூர்த்தியே !

சக்தி கொடு எனக்கு இல்லையேல் முக்தி கொடு!

அறித்யா அறிவழகன்

திங்கள், 21 நவம்பர், 2011

செப்பனிடு

kavi

Show Details

Message body

          
என் வாழ்க்கை பாதையை நீ
செப்பனிட மாட்டாயா !

கல்லான பாதையை நான் கந்தா என்றே
நான் கடந்திடுவேன் !

முள்ளான பாதையை நான் முருகா
என்றே முந்தி செல்வேன் !

புதைகுழி வந்துவிட்டால் கடம்பா
நான் என்ன செய்வேன் !
கடம்பா நான் என்ன செய்வேன் !

முகத்திரண்டு விழியிருந்தும் ஐயா
உனைக் காண வழியில்லையே !

கண்ணொளியை நீ தாராய் !
விழி மலரை உணரவைப்பாய் முருகா!

என் வாழ்க்கை பாதையை நீ
செப்பனிட மாட்டாயா !

சண்முகா! சண்முகா ! சண்முகா !
சரணம் ! சரணம் ! சரணம்!

                                           அறித்யா அறிவழகன்

தவப்பயனோ

Message body

           
முன்னம் செய்த தவப்பயனோ
முன்னோர் செய்த வினைப்பயனோ!

உன் புகழைப் பாடுகிறேன் !
உன்னடியை நாடுகிறேன் !
ஆ... ஆ.. ஆ ..ஆ.. ஆ. .

கந்தன் கைத் திருநீறு
காக்கும் என்னைப் பலவாறு !

விண்ணுலகம் போற்றும் தலைவா !
மண்ணுலகம் காக்கும் முருகா!

மானிடராய் இருக்கும் போதே
உன் பதமே சரணடைந்தேன்!

முன்னம் செய்த தவப்பயனோ
முன்னோர் செய்த வினைப்பயனோ

அறித்யா அறிவழகன்

வியாழன், 10 நவம்பர், 2011

சரவண பவ


போற்றுவேன் உனை மலர்க் கொண்டு!
பாடுவேன் உனை பண்ணோடு !
முருகா! முருகா ! முருகா!

விதி வழி மாட்டிக் கொண்டேன் இறைவா!
உன் விழி வழியால் எனைத் தேற்றுவாய் !
குமரா! குமரா !குமரா!

பொன்னுரு மேனியனே வண்ணமலர்க் கண்ணினே !
காத்திடுவாய் அண்ணலே போக்கிடுவாய் இன்னலே!
முருகா!முருகா!முருகா!

தில்லையிலே ஆடுகின்ற அம்பலத்தான் தன்மகனே
பொற்றேரில்  பவனி வரும் பழனி வடிவேலா!
சண்முகா!சண்முகா!சண்முகா!

சரணம் !சரணம் !சரணம் !
சரவண பவ ஓம் !

சனி, 5 நவம்பர், 2011

கடைத் (தெரு)


 
கடைதெருவில் உள்ள பொருள்
காசுக்குக் கிடைத்தாலும் !

எது கொடுத்தால் கிடைக்கும்
தெருவில் நிற்கும்
திரிந்த உறவுகள் !