ஞாயிறு, 14 நவம்பர், 2010

அம்மாவுக்கு

தாய் மடியே தலையணையிலும்
மேல் என்பான்
அவளுக்கு ஒன்று என்றால்
ஆடிப்போவான்
அவனி எங்கும் தேடினாலும்
அவள் போல் இல்லை என்பான்
கன்னியரின் கடைக்கண் கண்டபோது
முந்தி காட்டி பந்தி வைத்த போது
அத்தனையும் மாறிபோகுமோ
 
                                       
                                          அறித்யா அறிவழகன்

சிறு புன்னகையில்


சிறு புன்னகையில் உதிரும் பூக்களைத்தான்
நான் சிறகாய் எண்ணியுள்ளேன்!
என் கண்மணியே உன் விழி உவர் மழை தான்
நம் காதலை காட்டுதடி !
பேரிகை முழக்கமெல்லாம் சத்தம் என்பதுதான்
உந்தன் உதட்டில் பிறந்தடி !
கவலையும் கஷ்டமெல்லாம் பெரும் காயம் என்பதில்லை
கானல் நீராகுமடி !
 
                                                                                  அறித்யா அறிவழகன்

வருணனை

 
இந்திர சௌந்தரி
அன்பினில் நிரந்தரி
ஆசை காதலி
வதன மோகினி
மதுர சோதி நீ
நித்தில இசை நீ
சுவர்க்க பூமி நீ
சுவையினில் மாங்கனி
சுவைத்த பின் தேன் துளி
சுந்தர வதனி
பெண்டுலமாவதுன் காதணி
பஞ்சனை நெஞ்சினில்
தவழ்ந்திடும் கழுத்தணி
உலவும் தென்றலில்
ஊஞ்சலாடும் உன் குழலடி
பாவை உன் நெற்றியில்
சந்திர ஒளியடி
ஊறிய தேனில்
நீந்திடும் இதழடி
வைரத்தை கூர்ப்பாக்கும்
உந்தன் விழியடி
மாவினை எடுப்பதும்
கோலமிடுவதும் மங்கையர் தொழிலடி
உன் பூவிதழ் விரலால்
மாவினை தொடுவதே
கோலாகலம் தானடி
வேல்விழி தலைவி
வேலவர் புதல்வி
காதல் நாயகி
காண்பவர் வியந்திடும்
காந்தார எழிலினி
கஜமுகன் துணையும்
குரு திருவருளும்
என்றும் உனக்கடி

 அறித்யா அறிவழகன்

வாழ்த்து

வம்பளத்த கிளிகள் எல்லாம் வாழ்த்தி உமை பேசட்டும் !
கொடியிருக்கும் பூக்கள் எல்லாம் அங்கிருந்தே மனம் வீசட்டும் !
சலசலத்த நதிகள் எல்லாம் சப்தமின்றி ஓடட்டும் !
ரீங்கார வண்டுகள் மூங்கிலினுள் பாய்ந்து இசைக்கட்டும் !
புள்ளின மான்களெல்லாம் துள்ளி வந்து தாளம் போடட்டும் !
தித்திக்கும் தேன்பாகாய் கீதங்கள் உமை வாழ்த்தட்டும் !
இனிமையான இந்நாளில் எல்லா வளமும் வேலவன் தந்தருளட்டும் !
கனிவான குரலில் அங்கே என்னவளும் சேர்ந்து வாழ்த்துகிறாள் !
வையகம் போற்றிட வாழ்வாங்கு வாழ!

 அறித்யா அறிவழகன்

அவா

 
இளைப்பாருவோமா இரவின் மடியிலே 
தாலாட்டு பாடச் சொல்லலாமா தென்றலை
குளிர் சுனை நீர்க்குளத்தில் கல் வீசி
அதிர்வலைகளை கைதொட்டு உரசிபார்ப்போமா
செஞ்சாற்று குழம்பெடுத்து மங்கையர்
கால் படச்செய்யலாமா
வேம்பின் கரத்திருந்து தவழ்ந்து வரும்
இலையின் மிதவோட்டம் கண்டு செல்லலாமா
தென்னங்கீற்றின் ஓலையாட்டத்தை
பண்ணமைத்து இசை போடலாமா
ஆற்றின் நீரோட்டத்தில் துள்ளிடும்
மீனினத்தை கண்கொண்டு பேசலாமா
கதிர் முற்றி அறுவடைக்கு காத்திருக்கும்
பயிர் மேனி தொட்டு உணரலாமா
இரை கண்டு உறைவிடம் செல்லும்
மைனாவை வழிமறித்து பேசலாமா
தங்கையின் பிஞ்சு கரம் பிடித்து
பள்ளித்தலம் நோக்கி  நடக்கும்
சிருவனைக்கைசாடை செய்யலாமா
கொவ்வை இலை பறித்து கற்பலகை ஒடுபூசி
தமிழ் எழுத்தைப் பதிக்கலாமா
தமிழ்த்தாய் வாழ்த்தினையே உணர்வுகொண்டு
உரத்திச் சொல்லி பாடலாமா
அவாவுடன்

அறித்யா அறிவழகன்