மலரும் பூக்கள் எல்லாம்
மாலைகள் ஆவதில்லை
மலர்ந்த மலர்கள் உடன்
மாலையில் அமர்வதில்லை
கட்டிய மலர்ச்சரங்கள்
விழுந்தது எந்த இடம்
மனிதனின் மீது என்றால்
அவனுக்கு பெருமை
இறைவனின் தாளில் சிலைகளின் மீது
என்றால் யாருக்கு பெருமை !
உதிரும் போது தான் பூக்கள்
வீழ்வதை உணரும் !
உயரும் போதில் மனிதன்
மறப்பது ஏன் ?
மறப்பது ஏன் ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக