வியாழன், 26 ஜனவரி, 2012

இளைய காற்று

இதம் தேடுகையில் இளந்தென்றல் காற்று
எனை ஏதோ செய்கிறது !

எழில் காட்சி தனை விழி காணுகையில்
வானம் விந்தை அளிக்கிறது !

மேனியில் படரும் மெல்லிய காற்றில் தெள்ளிய
தேனாய் தித்திக்கிறது !

மான் விழி மங்கையின் வேல் விழி பார்வை
ஏகாந்த தன்மையை தருகிறது!

யாழினை மீட்டும் மெல்லிய விரல்கள்
பனித்துளி பட்டால் சிலிர்க்கிறதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக