வெள்ளி, 13 செப்டம்பர், 2013

வீழ்ந்து

வீழ்ந்து

நேற்றெனக்கு நிழல் தந்த தருவாய் 
தென்றல் உலவும் சோலையாய் 
குருவிகளின் குடிலாய் 
நெடுந்து படர்ந்த மரம் 
புள்ளினங்கள்  எச்சம் போடுதாம் 
பூக்கள் சருகுகள் குப்பையாம் 
வாழ்ந்து வீழ்ந்த மனிதனாய் 
மண்ணில் உலர்ந்த ரத்தத்துடன் 
உலராத உயிருடன் மரம் 
மண்ணின் வரம் !
  

                                           அறித்யா அறிவழகன்

புதன், 11 செப்டம்பர், 2013

வட்டிக் கடை

 வட்டிக் கடை 

நம்பிக்கை  நாணயம் என்று மட்டுமே 
எழுதினால் போதும் வட்டிக்கடையில் !

கைராசி என்றால் திரும்ப திரும்ப 
வாங்க வேண்டுமே கடன் !

வட்டி கடைகாரனின் வேண்டுதல் எல்லாம் 
பலி த்துவிடுகிறது !
நாமெல்லாம் கடன்காரர்கள் !

இவர்கள் கடன் கொடுக்கும் போது 
மட்டும் சிரிப்பவர்கள் !

இவர்கள் சிரிப்பார்கள் உன்னிடம் 
இருக்கும் பணத்தை அளந்த பின்பு !



                                  அறித்யா அறிவழகன்