கோணங்கி
புதன், 22 டிசம்பர், 2010
இன்பம் மீளுமா
குளிர்நிலவும் தரு நிழலும்
இன்பம் பயக்கலாம்!
குழலும் குயிலும் அதன் இசையும்
அமுதம் படைக்கலாம்!
குழந்தையின் மழலை அதனினும்
இனிக்கலாம்!
உற்றதுணை மாந்தர் மண்ணை விட்டு
போனபின்னே
அத்தனையும் சுகம் கொடுக்குமோ !
நாணம்
சாளரத்தின் கதவுகளில் அவளது கண்ண உரசல்கள் !
பூமித்தாயின் பரப்பின் மீது அவளின் புள்ளி வைக்கப்படாத கோலங்கள் !
இவையாவும் அவளின் காதல் பரிணாமத்தின் போது !
அறித்யா அறிவழகன் .,
தியானம்
சிறகுகள் தேவையில்லை நீ
மேகமாய் மாறும்போதில்!
நீச்சல் கற்கத் தேவையில்லை நீ
மரக்கலமாய் மாறும்போதில்!
பரம்பொருளைத் தேடவேண்டியதில்லை நீ
உன் வெளியை உணரும்போதில்!
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)