வெள்ளி, 2 அக்டோபர், 2015

இரங்கல் பாமாலை

 
 
 
இரங்கல் பாமாலை
************************
நெடிதான பகலோடு
கடிதான இரவோடு
காலத்தை நான் என்ன செய்ய !...

இந்த காலனை யார்
நொந்து சொல்ல!
ஐயா வென நான் சொல்ல
யார் இங்கு உள்ளார்!
பெரிய... பெண்ணம்
பெரிய , ஊர் பெரியவர், காவல் தெய்வம்,

 இறைத்தந்தை , எனும் வார்த்தைக்கு
உவமானம் இனி என்ன சொல்ல !
கட்டளைகள் இட்டுச் சென்றார்!
காவல் பணிக்கு ஓய்வு பெற்றார்!
காமேஸ்வரத்தை தவிக்க விட்டார்!
நீர் இட்ட இடத்தை யார்
நிரப்பக்கூடும்!
என்சொல்ல என்சொல்ல
காலத்தின் கலியாட்டம்,
காலனின் வெறியாட்டம்
இன்றோடு தீருமோ!
வெற்றித் திருமகனை
காவல் நாயகரை
சிவகாமி அம்மனுக்கு
அழகுக்கு அழகு செய்த
தென் கொண்ட விஸ்வகர்மா நீரல்லவோ!
நீங்கள் பிறந்த சித்திரை
நாளுக்கு கவி எழுத இருந்தவனை
இரங்கல்பா எழுத வைத்தார் !
எங்கள் இதயத்திலே இடம்பிடித்தார்!
தென்கொண்டார் அவரல்லவோ !
திரண்ட மக்கள் நாயகரும்
அவரல்லவோ!
எங்களோடு தெய்வம் வாழ்ந்து வந்தது!
விக்ரகம் இல்லா வெற்றுக் கோவிலாய் எங்கள் ஊர்!!

அவர் அடித்தால் பணிந்து!!!!